சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் லாபத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 118 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்வடைந்து 62,547 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயர்ந்து 18,534 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின்போது தட்டையாக மாறியது. காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 22.61 புள்ளிகள் சரிவடைந்து 62405.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.60 புள்ளிகள் உயர்ந்து 18,502.35 ஆக இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் அங்குள்ள செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய பங்குச்சந்தைகளில் சாதகமான சூழல் நிலவியது. என்றாலும் விற்பனை அழுத்தத்தின் காரணமாக நிலையில்லாமல் பயணித்த இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாளை குறைவான லாபத்துடன் நிறைவு செய்தன. உலோகம், வாகன பங்குகள் லாபத்துக்கு உதவின.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 118.57 புள்ளிகள் உயர்வடைந்து 62,547.11 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.35 புள்ளிகள் உயர்ந்து 18,534.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன. இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE