பங்குச்சந்தை | சென்செக்ஸ் 22 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்வடைந்து 62,618 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 18,553 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன தொடங்கிய போதிலும் வர்த்தகத்தின் போது தட்டையாக மாறியது. காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 22.61 புள்ளிகள் சரிவடைந்து 62405.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.60 புள்ளிகள் உயர்ந்து 18,502.35 ஆக இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் சாதமான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தைத் தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் சரிவடைந்து தட்டையான நிலைக்கு சென்றது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம் ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், பாரதி ஏர்டெல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE