முழு ஊரடங்கு: வெறிச்சோடிய ஆற்காடு ஏரி

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு காரணமாக இன்று ஆற்காடு ஏரியில் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 8 ஆயிரத்து 978 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சில தளர்வுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையான இன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக ஏற்காடு ஏரியில் படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து காணப்படும் படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE