தண்டவாளப் பராமரிப்புப் பணி; 4 நாட்கள் இரவு நேர ரயில் சேவை மாற்றம்: தெற்கு ரயில்வே

தண்டவாளப் பராமரிப்புப் பணி காரணமாக நான்கு நாட்கள் இரவு நேர ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"சென்னை கோட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பிரிவில் நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 11.45 மணி வரை (4 நாட்கள்) பாதை புதுப்பித்தல் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்ட போக்குவரத்துத் தடைகள் காரணமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி பின்வரும் ரயில் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ரயில் எண். 17229 திருவனந்தபுரம் சென்ட்ரல் - செகந்திராபாத் ஜே.என் டெய்லி சபரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் ரயில், நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும் (3 மணி நேரம் தாமதமாக).

இதேபோல் ரயில் எண்.16526 கேஎஸ்ஆர் பெங்களூரு - கன்னியாகுமரி டெய்லி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூருவில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்படும் ரயில், நவம்பர் 20, 24, 27 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரிலிருந்து புறப்படும் (ஒரு மணி நேரம் தாமதமாக)".

இவ்வாறு ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE