சென்னை: கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை அடையாறு காந்தி நகர் கேனால் பேங்க்சாலையில் உள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் வரும் ஞாயிறு (ஏப்.28) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்றஆசை பலருக்கும் உண்டு. ஆனால்,அதற்கான கல்வித் தகுதி என்ன, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதிக செலவாகுமா என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்களே அதிகம். அவ்வாறான தயக்கத்தைப் போக்கி, யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிப்பதற்கான தெளிவைத் தரும் நோக்கில் ‘உனக்குள்ஓர் ஐஏஎஸ்’ என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின்மேனாள் முதன்மைச் செயலர் எஸ்.எஸ்.ஜவஹர், தமிழக அரசின்மேனாள் செயலர் உ.சகாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய பூமிநாதன் ஆகியோர் ஊக்கவுரையாற்ற இருக்கிறார்கள். காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும், அனைத்து தேர்வுமாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு இலவசப் பயிற்சியும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/uoias241 லிங்கை சொடுக்கியோ, அருகில் உள்ள உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்தோ பங்கேற்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago