சில்க் மார்க் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’ - முதல் பட்டு ஆடை அணிந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள பெண்களுக்கான வாய்ப்பு

By Sponsored Content

சென்னை : முதன்முதலாக பட்டு ஆடை அணிந்துகொண்ட அனுபவங்களைப் பெண்கள் பகிர்ந்துகொள்ளும் வகையில் சில்க் மார்க் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து வழங்கும் ‘என்னோட முதல் பட்டு’ எனும் நெகிழ்வான நிகழ்வினை நடத்துகிறது.

தமிழ் குடும்பங்களின் விழாக்கள் மற்றும் பண்டிகைகளில் பெண்கள் மிகவும் விரும்பி பட்டு ஆடைகளை அணிந்துகொள்வது பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. முதன்முதலாக பட்டுப்புடவை அணிந்துகொண்ட அனுபவத்தை எந்த பெண்ணாலும் மறக்கவே முடியாது. அவரின் குடும்பம் மற்றும் நண்பர்களின் நினைவுகளில் என்றும் படிந்திருக்கும் இனிய அனுபவமாகவே அது இருக்கும்.

உங்களின் முதல் பட்டு ஆடை அணிந்த அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். முதன்முதலில் உங்களுக்குப் பட்டு ஆடையை பரிசளித்தது யார், எந்த தருணத்தில் பரிசளித்தார், முதல் பட்டு ஆடையை அணிந்துகொள்ள உங்களுக்கு உதவியவர் யார், அன்றைய நாள் நினைவுகளையும், அந்த பட்டு ஆடையை அணிந்திருக்கும் புகைப்படங்களையும் எங்களுக்கு அனுப்புங்கள். 200 முதல் 250 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, இத்துடன் உள்ள லிங்கில் https://www.htamil.org/EMP அல்லது QR Code-ஐ ஸ்கேன் செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

நீங்கள் எழுதும் பட்டு ஆடை அணிந்த அனுபவங்களில் தேர்வு செய்யப்படும் சிறப்பான அனுபவங்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன. தங்கள் அனுபவங்களை வரும் 2023 டிசம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்பிட வேண்டும். உற்சாகமாய் கலந்துகொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE