ராம்கோ சூப்பர்கிரீட், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும்  கட்டிடக்கலை நுட்ப விருதுகள் மற்றும் கட்டமைப்பு கலை நுட்ப விருதுகள் விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் செப்.30 வரை நீட்டிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை
ராம்கோ சூப்பர்கிரீட் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சிறப்பான பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் செப்.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுவெளியில் அறியப்படாமல் இருக்கும் கட்டுமானங்களிலும் கட்டமைப்புகளிலும் சிறந்து விளங்கும் பொறியாளர்களைக் கவுரவிக்கும் வகையில் சிறந்த பொறியாளர்களைத் தேர்வுசெய்து, அவர்களுக்கு ‘கட்டிடக்கலை நுட்ப விருதுகள்’ மற்றும் ‘கட்டமைப்பு கலை நுட்ப விருதுகளை’ வழங்கும் அறிவிப்பு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான இரு வாரத்திற்குள் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.

இத்துடன் உள்ள 5 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படவுள்ளன. கிராமப்புற வீட்டுக் கட்டுமானம், நகர்ப்புற குடியிருப்புக் கட்டுமானம், பொதுச் சேவை கட்டமைப்புகள்(உதாரணங்கள்: பாலம், சாலை, மெட்ரோ ரயில் நிலையம், மருத்துவமனை), பொதுப் பயன்பாடு கட்டமைப்புகள் (உதாரணங்கள்: பூங்கா,
விளையாட்டு அரங்கம்), தொழிற்சாலைக் கட்டமைப்பு.

மேலும், மாற்றுக் கட்டுமான பொருள்களைப் பயன்படுத்துதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானம் (உதாரணம்: சூரிய ஆற்றலைப் பயன்படுத்துதல்), புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், குறைவான கட்டுமான செலவு, மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த கட்டுமானம், பேரிடரைத் தாங்கும் திறன் ஆகியன விருதுக்கான சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும்.

இவ்விருது நிறுவனத்துக்கானது அல்ல. குறிப்பிட்ட திட்டத்திற்குத் தலைமை வகித்த தனிநபருக்கானது. விருதுக்குத் தன்னைத் தகுதியானவர் என்று கருதும் நபரோ அல்லது அவரை அறிந்தவர்களோ அல்லது அவர் சார்ந்திருக்கும் நிறுவனங்களோ கூட பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குப் பரிந்துரைக்கப்படுபவர் கட்டிய கட்டுமானங்களும் கட்டமைப்புகளும் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டவைகளாக இருக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த அரசு, தனியார் நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் பொறியாளர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தகுதியானவர்களைப் பரிந்துரை செய்யும்போது, எந்தப் பிரிவுக்கான பரிந்துரை என்பதோடு, அதற்கான சான்றாதாரங்களையும் உடன் இணைத்து என்ற லிங்கில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வரும் 2022 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பலரின் வேண்டுகோளுக்கேற்ப கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் விரைந்து விண்ணப்பியுங்கள். இந்த விருது நிகழ்வை ரினாகான் ஏ.ஏ.சி ப்ளாக்ஸ் இணைந்து வழங்குகிறது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE