மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ மே 16 - 22

By Guest Author

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மேஷ ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. இதனால் பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரியிடம் நற்பெயர் கிடைக்கும். இதுநாள்வரை தங்களுக்கு தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைப்பதற்கு சிறந்த சாத்தியக்கூறு உள்ளது. அதனால் மனதில் நிம்மதி ஏற்படும்.

சக பணியாளர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க அலைய வேண்டி இருக்கும்.

குடும்பச் சூழ்நிலை ஓரளவே மனநிம்மதியை தரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரித்து காணப்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

இதுவரை தடைப்பட்டுவந்த திருமணம் இப்போது நடக்கும். நீதிமன்ற வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பெண்கள் அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: தினமும் முருகனை வணங்கி கந்தர் அனுபூதி சொல்லி வாருங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: ஞாயிறு, வியாழன்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: ரிஷப ராசி அன்பர்களே! இந்தவாரம் குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். இருப்பினும் செலவுகள் இவ்வாரம் சற்று அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு ஏற்படும். தற்போது கல்லூரி படிப்பை முடித்து உள்ளவர்கள் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.

நேரத்திற்கு உணவருந்த முடியாமல் கூட போகலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள்.

குடும்பத்தில் குழந்தைகள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு நீங்கள் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் அவற்றை முன்நின்று தீர்த்து வைப்பீர்கள். கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை ஏற்படக்கூடும்.

நீதிமன்றத்தில் தங்கள் மீது வழக்குகள் ஏதாவது இருப்பின் அது இப்போது தங்களுக்கு சாதகமாக மாறும். கல்லூரி படிப்பை முடித்து இருக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பெண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வலம் வரவும். கோளறு பதிகம் படியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: வெள்ளி, சனி

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் ராகு, செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரக நிலைகள் உள்ளன | கிரகமாற்றம்: 20-05-2024 அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: மிதுன ராசி அன்பர்களே! இந்த வாரம் குடும்பத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்குமா என்றால் சந்தேகம் தான். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. உத்தியோகஸ்தர்களைப் பொறுத்த வரை வேலைக்கு விண்ணப்பித்து இதுவரை தகவல் வரவில்லையே என மனம் வருந்தி வந்தவர்க்கு நற்செய்தி காத்துள்ளது. தற்போது பணியில் இருந்து வருபவர்களுக்கு பதவி உயர்வு ஒன்று இந்த வாரத்தில் கிடைக்க சிறந்த வாய்ப்பு உள்ளது.

தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது மனநிறைவைத் தரும். பண பரிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால் வாரத்தின் பிற்பகுதியில் செய்யவும். வியாபாரம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவீர்கள். அதற்காக கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம் அது கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். புதிய வீடு அல்லது நிலம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பின் அதற்கான முயற்சிகளை இவ்வாரம் மேற்கொள்ளலாம். அதில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் அவசரப்படவேண்டாம். எதையும் சற்று தீர ஆராய்ந்து பார்த்து பின்பு முடிவு எடுக்கவும்.

கணவன் மனைவியிடையே அன்னியோனியம் குறைந்து காணப்படும். பெண்களுக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு திறமையாக செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பரிகாரம்: தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் படியுங்கள். பெருமாளுக்கு துளசி அணிவியுங்கள் | அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE