இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்துக்கு ஆளாவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துகள் கூட சீரியசாக வாய்ப்புள்ளது.

ரிஷபம்: வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தைப் பற்றிய கவலைகள் மனதை சஞ்சலப்படுத்தும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மிதுனம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலைச்சுமை குறையும். பணவரவு திருப்தி தரும்.

கடகம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். விலகியிருந்த சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள். திடீர் பயணம் உண்டு.

கடகம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். சாதுர்யமாகச் செயல்பட்டு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள்.

கன்னி: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தாயார் ஆதரவாக இருப்பார்.

துலாம்: சாதுர்யமாக பேசி கடினமான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். மனைவிவழி உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வெளியூர் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு: சகோதரர்கள் வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி முடிவுக்கு வரும்.

மகரம்: சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணம் வரும். வாகனத்தை சீர்செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமுண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறந்தவர்களால் பணஉதவி கிடைக்கும். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத்தொல்லை விலகும்.

மீனம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகக் காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE