இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

By செய்திப்பிரிவு

மேஷம்: நியாயமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். பயணம் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரத்தில் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்: வீண் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். பெரியவர்கள், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை பெற்று செயல்படுங்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. பேச்சில் பொறுமை தேவை.

மிதுனம்: நீண்டநாள் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் விலகும். பண வரவு உண்டு.

கடகம்: நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்: புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் போட்டிகள் விலகும். அலுவலகத்தில் பணிச் சுமை குறையும்.

கன்னி: ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். வியாபாரத்துக்காக புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள்.

துலாம்: திடீர் பயணம், அலைச்சல், அசதி, டென்ஷன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும்.

விருச்சிகம்: இங்கிதமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு நம்பிக்கை தரும். பயணம் சிறப்பாக அமையும். தொழிலில் போட்டிகள் குறையும்.

தனுசு: சுறுசுறுப்புடன் செயல்பட்டு வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உடல்நலம் சீராகும். வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் இருந்த தேக்க நிலை மாறும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டு.

கும்பம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மனைவி வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியுடன் புது வேலை கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.

மீனம்: தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும். பணவரவால் வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE