விசாகம்: கிரகநிலை: ராகு பகவான் உங்களுடைய பதினைந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து ஒன்றாம் பாதத்திற்கு மாறுகிறார். கேது பகவான் உங்களுடைய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்தப் பெயர்ச்சியில் வெளியூர் பயண வாய்ப்புகள் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நல்லபடியாக நடக்கும். பணவரத்து அதிகமாகும்.
யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் வெற்றி கொடுக்கும். அசாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட முயற்சிகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகள் மேல் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
பெண்களுக்கு வீண் மனக்கவலை அகலும். கலைத்துறையினருக்கு புத்தி சாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் நீங்கும். அரசியல் துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலில் வேகமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.
பரிகாரம்: முருகனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்.
மதிப்பெண்கள்: 70% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
***