- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம்: 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
இந்த குருப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - சிம்மம் - துலாம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்களைப் பெறும் ராசிகள்: மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் - கும்பம்
பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - தனுசு - மீனம்
குரு பகவான் பயோடேட்டா:
சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -தேவகுரு
குரு காயத்ரீ மந்திரம்
ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.
குரு ஸ்லோகம்
தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்
பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
குருப்பெயர்ச்சியை அடுத்து குருபகவானை குரு காயத்ரி சொல்லி, குருவுக்கு உரிய நைவேத்தியங்களைப் படைத்து, குருவின் அதிதேவதைகளை ஆத்மார்த்தமாக வணங்கிவந்தால், குருவருளையும் இறையருளையும் பெறலாம்.
*************************