- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
திருவோணம்:
குரு பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த குருப்பெயர்ச்சியில் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு, மனச் சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும்.
எதையும் கண்மூடித்தனமாக செய்யாமல் யோசித்துச் செய்வது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம்.
கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. அரசியல்வாதிகள். எல்லோரிடமும் அனுசரித்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: திருப்பதி பெருமாளை வழிபடுங்கள். மனதில் சந்தோஷம் நிலைக்கும்.
மதிப்பெண்கள்: 61% நல்லபலன்கள் ஏற்படும்.
*************************