உத்திராட நட்சத்திரக்காரர்களே! குருப்பெயர்ச்சி பலன்கள்; தன்னம்பிக்கை கூடும்; பண வரவு உண்டு; தொழிலில் லாபம்; நல்ல வேலை கிடைக்கும்!

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திராடம்:

குரு பகவான் உங்களின் உங்கள் நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய உத்திராட்ம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!

இந்த குருப்பெயர்ச்சியில் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயரும் புகழும் கூடும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும்.

இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும்.

பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

பெண்கள் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு மனோதிடம் கூடும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய மாற்றம் வரும்.

பரிகாரம்: மஹாலக்ஷ்மியை வழிபாடு செய்யுங்கள். சங்கடங்களைத் தீர்க்கும். சந்தோஷத்தைக் கொடுக்கும்.

மதிப்பெண்கள்: 62% நல்லபலன்கள் ஏற்படும்.

********************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE