- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
விசாகம்:
குரு பகவான் உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
என் கடமை பணி செய்து கிடப்பதே என்பது போல பிரதிபலன் எதிர்பார்க்காமல் காரியங்களைச் செய்யும் குணமுடைய விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த குருப் பெயர்ச்சியில் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். காரியத் தடைகள் ஏற்படும். கூடுதல் செலவு உண்டானாலும் பணவரத்து அதிகரிக்கும்.
புத்திசாதுர்யம் கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். உறவு பலப்படும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம்.
அரசியல்வாதிகளுக்கு பிரச்சினைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரும்.
மதிப்பெண்கள்: 64% நல்ல பலன்கள் ஏற்படும்.
************************