- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூசம்:
குரு பகவான் உங்களின் பதினான்காவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார்.
எதைச் செய்தாலும் அதில் லாபம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய பூசம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த குருப்பெயர்ச்சியில் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.
சின்னச்சின்னப் பிரச்சினையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்குக் கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு அடுத்தவர் கூறுவதை யோசித்துப் பார்த்து அதன் பிறகு காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.
அரசியல்துறையினருக்கு மனமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: குபேர வழிபாடு பிரச்சினைகளைப் போக்கும். பணப்பிரச்சினையைத் தீர்க்கும்.
மதிப்பெண்கள்: 78% நல்லபலன்கள் ஏற்படும்.
******************