அறிவோம் நம் மொழியை - வலசை என்றால் என்ன?
இப்போதெல்லாம் வலசை என்ற சொல் பெரும்பாலும் பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டில் குடியேறுவதற்குதான் 'வலசை' என்று பழந்தமிழில் பெயர். காலப்போக்கில் பொருள் சற்று மாறி பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தொடர்பான சொல்லாக 'வலசை' ஆகிவிட்டது.
மனிதர்கள் வேறு நாட்டுக்குக் குடியேறுவதைக் குறிக்க 'புலம்பெயர்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். 'வலசை' என்ற சொல்லுக்கு 'குக்கிராமம்' என்ற பொருளும் இருந்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 'வலசையூர்' என்று ஒரு கிராமம் இருக்கிறது.
SCROLL FOR NEXT ARTICLE
▼