Published on : 14 Oct 2023 20:46 pm

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றித் தருணங்கள் - போட்டோ ஸ்டோரி @ ODI WC 2023

Published on : 14 Oct 2023 20:46 pm

1 / 45
உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. படங்கள்: விஜய் சோனேஜி, தீபக்
2 / 45
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
3 / 45
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியைக் காண மைதானத்தின் வாயிலில் முற்பகல் 11.30 மணி அளவில் ரசிகர்கள் பெருமளவில் கூடியிருந்து ஆரவாரம் செய்தனர்.
4 / 45
நரேந்திர மோடி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தேசிய கொடியுடன் குவிந்ததால் வீதியே கரகோஷத்தில் விழாக்கோலம் பூண்டது. பலத்த சோதனைகளுக்குப் பிறகே ரசிகர்களை காவல் துறையினர் மைதானத்துக்குள் அனுமதித்தனர்.
5 / 45
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
6 / 45
உலகக் கோப்பையின் துவக்க நாளில்தான் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இடையில் நடைபெறும் ஒரு போட்டிக்காக (இந்தியா - பாகிஸ்தான்) இவ்வாறு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
7 / 45
சுமார் 12.30 மணி அளவில் பாடகர்கள் சங்கர் மகாதேவன், அர்ஜித் சிங், சுக்விந்தர் சிங் ஆகியோர் மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தினர்.
8 / 45
இந்த இசை நிகழ்ச்சி அரங்கில் உள்ள பார்வையாளர்கள் கண்டுகளிக்க மட்டுமே தவிர, ஒளிபரப்பப்படாது என ஸ்டார் ஸபோர்ட்ஸ் தெரிவித்திருந்தது. அதனால், அந்த நிகழ்ச்சிகள் டிவியில் ஒளிபரப்பாகவில்லை.
9 / 45
அசம்பாவிதங்களை தவிர்க்க நரேந்திர மோடி மைதானத்தின் நுழைவாயிலில் உயர்மட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
10 / 45
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான உலக கோப்பை தொடர் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
11 / 45
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 191 ரன்களில் சுருண்டது.
12 / 45
பாகிஸ்தானின் ஓப்பனர்களாக அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். பொறுமையாக ஆட்டத்தை தொடங்கியவர்கள், 7-ஆவது ஓவரில் ஆளுக்கு 18 ரன்களைச் சேர்த்த நிலையில் அணியின் ஸ்கோர் 37 ஆக இருந்தது.
13 / 45
8-ஆவது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப் உடைக்கப்பட்டது. முஹம்மது சிராஜ் வீசிய பந்தில் முஹம்மது ஷபிக் எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி 20 ரன்களில் வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்தார் கேப்டன் பாபர் அஸம்.
14 / 45
10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 49 ரன்களைச் சேர்ந்திருந்தது. இந்த ஆண்டில் பாகிஸ்தான் விளையாடிய 18 ஒருநாள் போட்டிகளில் பவர் ப்ளேயில் அந்த அணி சார்பில் யாரும் சிக்சர்கள் விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
15 / 45
6 ஃபோர்களை விளாசி 36 ரன்களுடன் களமாடிக்கொண்டிருந்த இமாம்-உல்-ஹக்கின் விக்கெட்டை 13-ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல்.
16 / 45
அவரைத் தொடர்ந்து பாபர் அஸம் - முகமது ரிஸ்வான் பாட்னர் ஷிப் அமைத்து நிதான ஆட்டத்துடன் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
17 / 45
57 பந்துகளில் அரைசதம் கடந்த பாபர் அஸமை 29-ஆவது ஓவரில் சிராஜ் போல்டாக்கினார். அவ்வளவு தான். அடுத்தடுத்து பாகிஸ்தான் தனது வேகத்தை இழக்கத் தொடங்கியது.
18 / 45
சவுத் ஷகீல் 6 ரன்கள், இப்திகார் அகமது 4 என 33-ஆவது ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது பாகிஸ்தான். ரிஸ்வான் நம்பிக்கையளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரிலேயே பும்ரா பந்தில் போல்டானார்.
19 / 45
ஷதாப் கான் 2, முஹம்மது நவாஸ் 4, ஹசன் அலி 12 என அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 41 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 189 ரன்களைச் சேர்த்திருந்தது.
20 / 45
ஹரிஸ் ரவூஃப்,ஷஹீன் அப்ரிடி இறுதிக்கட்டத்தில் போராடி வந்த நிலையில், ஹரிஸ் ரவூஃப் 2 ரன்களில் அவுட்டாக 191 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. இந்திய அணி தரப்பில் சிராஜ், பும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
21 / 45
192 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தும் முனைப்புடன் இந்திய அணியின் ஓப்பனர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.
22 / 45
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பிய சுப்மன் கில் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஷஹீன் அப்ரிடி வீசிய 3வது ஓவரில் 16 ரன்களுடன் விக்கெட்டானார்.
23 / 45
தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி நிலைப்பார் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவரும் 16 ரன்களில் கிளம்பினார்.
24 / 45
10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி 79 ரன்களைச் சேர்த்திருந்தது.
25 / 45
ரோகித் சர்மாவுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோக்க ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் இணைந்து பாகிஸ்தானின் பந்துவீச்சை பறக்க விட்டனர்.
26 / 45
அதிரடி காட்டிய இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர். மைதானம் முழுக்க ‘இந்தியா’ என கரகோஷங்கள் ஒலிக்க சிக்சர்கள் பறந்தன.
27 / 45
சதத்தை நோக்கி அதிரடி காட்டிய ரோகித், ஷஹீன் அப்ரிடி வீசிய ஸ்லோ பாலை தூக்கி அடுத்தபோது அது இஃப்திகார் அகமது கைக்குள் அடைக்கலம் புகுந்தது.
28 / 45
6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என 63 பந்துகளில் 86 ரன்களுடன் வெளியேறினார் ரோகித். 22 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 158 ரன்களைச் சேர்த்திருந்தது.
29 / 45
கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் கைகோத்தனர். விக்கெட் விழாமல் பார்த்துகொண்ட இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
30 / 45
இறுதியில் 30ஆவது ஓவர் 3வது பந்தில் ஸ்ரேயாஸ் பவுண்டரி அடித்து தனது அரைசதத்தை எட்ட வெற்றி இலக்கும் எட்டப்பட்டது.
31 / 45
ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
32 / 45
பாகிஸ்தான் அணி தரப்பில், ஷஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளையும், ஹஸன் அலி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
33 / 45
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 8-ஆவது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது இந்தியா. இந்த வெற்றி வரலாறு தொடர்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
34 / 45
35 / 45
36 / 45
37 / 45
38 / 45
39 / 45
40 / 45
41 / 45
42 / 45
43 / 45
44 / 45
45 / 45

Recently Added

More From This Category

x