Published on : 24 Oct 2024 16:50 pm

மகிழ்ச்சி பெருக துளசி வழிபாடு

Published on : 24 Oct 2024 16:50 pm

1 / 9

துளசி வழிபாடு ஆன்ம பலத்துடன் தேக பலத்தையும் அளிக்கும் பொக்கிஷமாகத் திகழ்கிறது. இறைவனுக்கு பிரியமான துளசிக்கு ‘பிருந்தா’ என்றும் பெயர்.

2 / 9

தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் இல்லத்தில் ஒற்றுமை மேலோங்கி, மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.

3 / 9

மகத்துவம் வாய்ந்த துளசி, பூமிக்கு 24 மணி நேரமும் பிராணவாயுவை மட்டுமே தரும் சிறப்பு வாய்ந்தது.

4 / 9

துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், நம் சுவாசம் ஆரோக்கியமாகி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 
 

5 / 9

பச்சை துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த தீர்த்தத்தை அருந்தும்போது, நம் உடலில் அது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது.
 

6 / 9

லட்சுமிதேவியின் அவதாரமாக துளசி செடி கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை ஒழிக்க வல்ல துளசி, இருமல், சளி நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
 

7 / 9

உலகில் 200-க்கும் அதிகமான துளசி வகைகள் உள்ளன. உருவ அமைப்பு வேறுபட்டு இருந்தாலும், அவற்றின் பலன்கள் ஒன்றாகத்தான் உள்ளன.
 

8 / 9

பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோன் வாயுவை துளசி வெளிவிடுகிறது. 
 

9 / 9

வீட்டின் நுழைவாயில், பால்கனி, மொட்டை மாடியில் துளசி செடியை வளர்ப்பதன் மூலம் தூய்மையான பிராணவாயுவை பெறலாம்.| தகவல்கள்: ரங்க ராமானுஜ தாஸன்

Recently Added

More From This Category

x