Published on : 20 Sep 2024 19:14 pm

புரி ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் - ஒரு விசிட்

Published on : 20 Sep 2024 19:14 pm

1 / 11

இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஒடிசா மாநிலம் புரி நகரத்தில் அமைந்த ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில், சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

2 / 11

புரி தலத்தில் ஸ்ரீ ஜெகந்நாதர் தனது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்ரா தேவியுடன் அருள்பாலிக்கிறார். மூலவர் விக்கிரகங்கள் மரச் சிற்பங்களால் ஆனவை.
 

3 / 11

‘உத்கலம்’ என அழைக்கப்படும் ஒடிசாவில் அமைந்துள்ளது புரி நகரம். சோழ மன்னர் அனந்த வர்மன் சோதங்க தேவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது கோயில்.
 

4 / 11

665 அடி நீளமும், 640 அடி அகலமும் கொண்டது கோயில். பிரகாரச் சுவர் 20 அடி முதல் 24 அடி உயரம். 4 திசைகளிலும் 4 மகா துவாரங்கள் உள்ளன.

5 / 11

ஸ்ரீஜெகந்நாதர் கோயிலில், பிரதான மூர்த்திகள், 4 அடி உயரம் 16 அடி நீளமுள்ள ஒரு கல் மேடையின் (ரத்னவதி) மீது ஸ்தாபிக்கப்பட்டுள்ளனர்.
 

6 / 11

மேடையில் மேல் வடக்கில் 6 அடி உயர சுதர்சன சக்கரத்துக்கு தெற்குப் பகுதியில் ஸ்ரீ ஜெகந்நாதர், சுபத்திரை, பலபத்ரனின் மூர்த்திகள் நின்ற நிலையில்!

7 / 11

ஜெகந்நாதருக்கு ஒருபுறம் லட்சுமி தேவியும், மறுபுறம் சத்தியபாமாவும் அருள்பாலிக்கின்றனர்.

8 / 11

மூர்த்திகளுக்கு ஆரதி அலங்காரம், அவகாசர் அலங்காரம், ப்ரஹார அலங்காரம், தாமோதர அலங்காரம் செய்யப்படுகின்றன.
 

9 / 11

ஜெகந்நாதர் கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழுவதில்லை. பறவைகள் கோயிலின் மேல் பறப்பதில்லை. கோபுரத்தின் மீது எந்தப் பறவையும் அமர்வதில்லை.

10 / 11

கோபுரத்தின் மீதுள்ள சுதர்சன சக்கரம், பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் ஒன்றுபோல காட்சியளிக்கும்.   
 

11 / 11

கோயிலில் கடலலை சப்தம் கேட்பதில்லை. ஆடி அமாவாசைக்குப் பிறகு வரும் துவாதசி தின ரதோற்சவம் பிரசித்தி பெற்றது. | தகவல்கள்: கே.சுந்தரராமன்
 

Recently Added

More From This Category

x