Published on : 13 Sep 2024 17:42 pm

‘ஓணம்’ பின்புல புராணக் கதை தெரியுமா?

Published on : 13 Sep 2024 17:42 pm

1 / 9

அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் ஓணம் பண்டிகை திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

2 / 9

மன்னன் மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் வெற்றி கொண்டார். வீரமும் தீரமும் மிக்க அந்த மன்னர் ஈகையிலும் சிறந்து விளங்கினார். 
 

3 / 9

மகாபலிக்கு ஏற்பட்ட ஆணவத்தையும், அவரது பக்தியின் மேன்மையையும் உலகுக்கு உணர்த்த திருமால் எடுத்த அவதாரமே வாமன அவதாரம்.
 

4 / 9

மூன்று உலகுக்கும் தானே முதல்வன் என்று ஆணவத்தோடு இருந்த மகாபலி சக்கரவர்த்தியிடம் வாமன ரூபத்தில் வந்த திருமால் மூன்று அடி இடம் கேட்டார்.
 

5 / 9

வாமன ரூபத்தில் இருந்த திருமாலிடம், “குள்ளத் தோற்றத்தில் மூன்றடி தானம்... தந்தேன்” என்றார் மகாபலி சக்கரவர்த்தி.
 

6 / 9

விஸ்வரூபம் எடுத்த திருமால் தனது முதல் அடியில் மண்ணையும், இரண்டாவது அடியில் விண்ணையும் எடுத்து வைத்தார். 

7 / 9

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை பகவான் விஷ்ணு அடக்கிய சம்பவத்தை ஒட்டி ஓணம் திருவிழா கொண்டாடப்படுவதாக ஐதிகம்.

8 / 9

ஆண்டுதோறும் திருவோண நட்சத்திரத்தில் தன் நாட்டு மக்கள் வளமுடன் வாழ்வதைப் பார்வையிட திருமாலிடம் வரம் அருள வேண்டினார் மகாபலி.

9 / 9

மகாபலி ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் மக்களைக் காண வரும்போது, அவரை வரவேற்கவே அத்தப்பூ கோலமிட்டு மகிழ்கின்றனர். | தொகுப்பு: யுகன்

Recently Added

More From This Category

x