Published on : 13 Sep 2024 15:32 pm

ஓணம்: அத்தப்பூ கோலம் ஏன்?

Published on : 13 Sep 2024 15:32 pm

1 / 8

கோலம் என்பதே தனிக் கலைதான். அதுவும் பூக்களாலே போடப்படும் அத்தப்பூ கோலத்தைப் போடுவதற்குப் பொறுமை அதிகம் வேண்டும். 

2 / 8

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் ஓர் அங்கமாக உள்ள அத்தப்பூ கோலம் இன்று சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பெண்களால் ஆராதிக்கபடுகிறது. 

3 / 8

அத்தப்பூ கோலத்துக்கு பின்னால் புராணக் கதை இருக்கிறது. அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே இதன் ஐதீகம். 

4 / 8

தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்கவே விதவிதமான பூக்களில் அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் கேரளப் பெண்கள். 

5 / 8

கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பார்க்கப்படுகிறது. 

6 / 8

மொத்தம் 10 நாட்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலமிடுவர். 

7 / 8

முதல் நாள் ஒரு வகை, இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் 10 வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள். 

8 / 8

அத்தப்பூ இடுவதற்காக தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை அதிகம் பயன்படுத்துவர். | தகவல்: ஈஸ்வரி

Recently Added

More From This Category

x