Published on : 06 Sep 2024 18:13 pm

மண் பிள்ளையார் மகிமை என்ன? - விநாயகர் சதுர்த்தி குறிப்புகள்

Published on : 06 Sep 2024 18:13 pm

1 / 7

பிள்ளையார்... எல்லோருக்கும் விருப்பமானவர். இவரை வேண்டிக்கொள்வதும் வழிபடுவதும் விரதம் மேற்கொள்வதும் என மிக மிக எளிமையானவை.  
 

2 / 7

மனதில் பிள்ளையாரை சிந்தித்தபடி, கொஞ்சம் மஞ்சள் எடுத்துக் வைத்தாலே போதும்... அதில்  கணபதி அழகாக வந்து உட்கார்ந்து அரசாட்சி செய்வார் என்பது ஐதீகம்.

3 / 7

எத்தனை உயரமாக, வெள்ளி, வெண்கலம் என சிலைகள் இருந்தாலும் விநாயக சதுர்த்தி நாளில், மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைத்து பூஜை செய்வதே மரபு.

4 / 7

இந்த மண் பிள்ளையாரை யார் வேண்டுமானாலும் செய்து பூஜிக்க முடியும். மண் பிள்ளையாருக்கு ஆகமங்களும் இல்லை; விதிகளும் கிடையாது.

5 / 7

குடிசையில் இருப்பவர் முதல் கோடீஸ்வரர்கள் வரை எல்லார் வீடுகளிலும், விநாயக சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் வைத்து பூஜைகள் நடந்தேறும். அவருக்குத்தான் வழிபாடுகள் அமர்க்களப்படும்.
 

6 / 7

பிள்ளையாருக்கு சார்த்தப்படும் அருகம்புல்லும் வெள்ளெருக்கம்பூவும் இன்றைக்கும் கிராமங்களில் எல்லா இடங்களிலும் இருப்பதைப் பார்க்கலாம். நகரங்களில்தான் காசு கொடுத்து வாங்குகிறோம். 

7 / 7

மண் பிள்ளையாரை வணங்கினால், மண்... பிள்ளையாராக இருந்து, மீண்டும் மண்ணாவது போல், நமக்கு வருகிற துன்பங்களும் மண்ணாகிப் போகும். | தொகுப்பு: வி.ராம்ஜி

Recently Added

More From This Category

x