Published on : 24 Aug 2024 16:14 pm

தமிழ்க் கடவுள் முருகன் - சிறப்புக் குறிப்புகள்

Published on : 24 Aug 2024 16:14 pm

1 / 11

கடைச்சங்க காலத்துக்குப் பிறகான தொன்மங்கள் முருகப் பெருமான் தொடர்பான பல புனைவுகளை உருவாக்கி இருந்தாலும், தற்காலத்தில் முருக வழிபாடு தமிழ் மக்களின் வழிபாடாகவே காணப்படுகிறது.

2 / 11

உலகளாவிய நிலையில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளிலும் முருக வழிபாடு நடைபெறுகிறது.
 

3 / 11

ஆதிசங்கரர் வகுத்த ஆறு சமயங்களுள் கௌமாரம் என்பது முருகனை முழுமுதற் கடவுளாகப் போற்றிப் பின்பற்றுவதாகும்.

4 / 11

முருகனுடைய வரலாற்றில் குறிப்பிடப்படும் வழிபாட்டிடங்கள் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. முருக வழிபாடு என்பது தமிழ் மக்களின் வழிபாடாகவே உலகளவில் அறியப்படுகிறது.
 

5 / 11

ஐவகை நிலவகைப் பாட்டில் குறிஞ்சி நிலக் கடவுளே முருகன். குறிஞ்சி மலைப் பகுதி என்ற காரணத்தால் தான் ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம்’ என்பது பயன்பாட்டில் உள்ளது.

6 / 11

தொல்காப்பியம் முருகனை சேயோன் என்று குறிப்பிடுகிறது. சேயோன் என்பது மக்கள் உயர்ந்த மலைப் பகுதியில் இருப்பவர் என்னும் பொருளையும், சிவனின் சேய் என்னும் பொருளையும் வழங்குகிறது.
 

7 / 11

முருகன் என்ற சொல், சங்க இலக்கியங்களில் வந்துள்ளது. பத்துப் பாட்டு நூல் தொகுப்பில் முதலாவதாக இடம்பெறும் திருமுருகாற்றுப்படை என்னும் நூலின் தலைப்பிலேயே ‘முருகு’ என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

8 / 11

புறநானூற்றிலும் முருகன் என்னும் சொல்லும் முருகனைக் குறிக்கும் வேறு சொற்களும் வந்துள்ளன. மதுரைக் காஞ்சி, பட்டினப்பாலை முதலானவற்றிலும் முருகு என்னும் சொல் வந்துள்ளது. 
 

9 / 11

சிவபெருமான் நிகழ்த்தியதாகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் தமிழ்நாட்டில்தான் நிகழ்த்தப்பட்டுள்ளன.

10 / 11

முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர்.

11 / 11

‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ கமலனான நான்முகனையும் (பிரம்மதேவர்) குறிப்பிடுகின்றன. | தகவல்கள்: முனைவர் முகிலை இராசபாண்டியன்

Recently Added

More From This Category

x