மானாமதுரை மண்பாண்டக் கூடத்தில் அண்ணாமலை - போட்டோ ஸ்டோரி
Published on : 02 Aug 2023 11:08 am
1 / 10

‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை 5-ம் நாளான செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வழிவிடும் முருகன் கோயிலில் இருந்து அண்ணாமலை தொடங்கி நகராட்சி அலுவலகம் முன் நிறைவு செய்தார்.
2 / 10

பின்னர் அண்ணாமலை பேசும்போது, “தமிழகத்தில் தற்போது மது விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணல் சுரண்டப்பட்டதால் வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வெளியூர், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது” என்றார்.
3 / 10

முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. கடந்த 27 மாத கால ஆட்சியில் உருப்படியான திட்டங்களைச் செயல்படுத்தவில்லை” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
4 / 10

“தேர்தல் வாக்குறுதியில் 3.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என திமுக கூறியது. ஆனால் இதுவரை 2,000 பேருக்குக்கூட வேலை கொடுக்க முடியவில்லை” என்று அண்ணாமலை சாடினார்.
5 / 10

“திமுக அரசு சென்னை பகுதியிலேயே தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்கிறது. மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பது கிடையாது” என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைத்தார்.
6 / 10

“திமுக அரசு சென்னை பகுதியிலேயே தொழில் நிறுவனங்களை தொடங்க அனுமதிக்கிறது. மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பது கிடையாது” என்ற குற்றச்சாட்டையும் அண்ணாமலை முன்வைத்தார்.
7 / 10

“மத்திய அரசு பட்டியலின மக்களின் சிறப்பு திட்டத்துக்காக தமிழகத்துக்கு வழங்கிய ரூ.3,000 கோடியை மகளிர் உரிமை திட்டத்துக்குப் பயன்படுத்த திமுக அரசு திட்டமிட்டுள்ளது. பணம் இல்லை என்றால் எதற்காக ரூ.1,000 கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள்?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
8 / 10

“திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன், என் பேரன்’ என்று சொல்லி இருப்பர்” என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
9 / 10

தொடர்ந்து மண்பாண்ட பொருட்களைப் பார்வையிட்டு அங்குள்ள தொழிலாளர்களைச் சந்தித்துக் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை.
10 / 10

குடியிருப்புகளுடன் கூடிய மண்பாண்டக் கூடம் அமைத்து தர வேண்டுமென அவரிடம் தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை உறுதியளித்தார்