Published on : 10 Apr 2025 16:38 pm

‘நோ’ மென்பானம்... கோடையில் தாகம் தீர்ப்பது எப்படி?

Published on : 10 Apr 2025 16:38 pm

1 / 9

சர்க்கரை நோய், சிறுநீரகக் கற்கள், உடல் பருமன், பற்களுக்கு பிரச்சினை என  மென்பானம் (Soft drinks) பருகுவதால் வரும் ஆபத்துகளின் அணிவகுப்பு நீளமானது.

2 / 9

இயற்கையில் தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் தண்ணீருக்குத்தான் உள்ளது. ஆகவே, கோடைக் காலத்தில் தினமும் 3-ல் இருந்து 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். 

3 / 9

பாட்டில் நீரைவிட கொதிக்கக் காய்ச்சி, ஆறவைத்த தண்ணீரே சுகாதாரமானது. இதைக் குளிரக் குளிரக் குடிக்க, மண்பானையில் ஊற்றிவைத்து குடிப்பதே ஆரோக்கியம்.

4 / 9

தண்ணீருக்கு அடுத்து, தாகம் தணிக்க உதவுவது இளநீர், நீர்மோர், சர்பத், பானகம், பதநீர். இயற்கைப் பழங்கள், பழச்சாறுகளும் இதற்கு உதவும். 

5 / 9

தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகள் நல்லது.  

6 / 9

எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது, கோடைக் காலத்தில் குறைந்த செலவில் நிறைந்த பலனைப் பெற உதவும்.

7 / 9

கோடையில் குடிக்க இளநீர்தான் மிகச் சிறந்த சத்தான பானம். இளநீரை தண்ணீரில் போட்டு வைத்து, ஒரு மணி நேரம் கழித்து வெட்டிக் குடிப்பது நற்பலன் தரும். 

8 / 9

இளநீரைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சில மணி நேரம் கழித்துக் குடித்தால், இளநீரின் மருத்துவக் குணங்கள் மாறிவிடும். 

9 / 9

இளநீரில் உள்ள தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், நீரிழப்பு பாதிப்புகள் உடனே குறையும். | படங்கள்: மெட்டா ஏஐ

Recently Added

More From This Category

x