Published on : 22 Oct 2024 19:18 pm

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது எதற்காக?

Published on : 22 Oct 2024 19:18 pm

1 / 11

நல்ல பாம்பு, நாகம் என அழைக்கப்படுகிறது. இது நஞ்சுப் பாம்பு. நம் நாட்டிpf நான்கு முக்கிய நஞ்சுப் பாம்புகளில் இதுவும் ஒன்று. 
 

2 / 11

இது தரைவாழ் பாம்பு என்பதால் வயல்வெளிகள், தோட்டங்கள், விறகுக் குவியல், கற்குவியல், எலி வளை என மறைந்து வாழக்கூடிய இடத்திலெல்லாம் வாழும். 
 

3 / 11

நீர், இரை, தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் அமைந்தால் மனிதக் குடியிருப்புக்கு அருகிலேகூட இது தங்கிவிடும். இருந்தாலும், மனிதர்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புகிறது.

4 / 11

சில நல்ல பாம்புகள் 4, 5 கோழி முட்டைகளை முழுவதுமாக விழுங்கும். இரையின் மீது நஞ்சைச் செலுத்திச் செயலிழக்கவைத்து உயிருடன் விழுங்கும்.

5 / 11

நல்ல பாம்பின் நஞ்சு (venom) நரம்பு மண்டலத்தைத் தாக்கும் (Neurotoxic). இக்கடியால் இறுதியில் இதயக் கோளாறுகளை (மாரடைப்பு) எதிர்கொண்டு இறக்க நேரிடலாம்.
 

6 / 11

நல்ல பாம்பின் நஞ்சு வேகமாகச் செயல்படும். காலம் தாழ்த்தாமல் பாம்புக்கடிக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டும்.
 

7 / 11

பாம்புகள் கடிப்பதால் உடனே யாரும் மரணிப்பது இல்லை. விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் சிகிச்சையைப் பெற்றால், பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம்.
 

8 / 11

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்பொழுதும்கூடச் சட்டென்று தாக்காது. எச்சரித்தபடியே இருக்கும். யாரும் தாக்க முனையாதபோது, மெல்லத் தணிந்து அந்த இடத்திலிருந்து அகன்றுவிடும்.
 

9 / 11

தொந்தரவு ஏற்பட்டால் உடனே கடிக்காமல் மூடிய வாயால் அல்லது படத்தால் (Hood) எதிரியைத் தாக்கி பயம்கொள்ளச் செய்யும். 
 

10 / 11

சில நேரம் பொய்க்கடி (dry bite) கடிக்கும். இதனால், உடலில் நஞ்சு செலுத்தப்படாது. இதைத் தாண்டித் தனக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதும்போது கடித்துவிடும்.
 

11 / 11

பாம்புகளால் அதிகம் கடிபடுவதற்குக் காரணம் இவற்றின் எண்ணிக்கையும், பரவலாக இருப்பதுமே. நம் அலட்சியமும் மற்றொரு முக்கியக் காரணம். | தகவல்கள்: மா.ரமேஸ்வரன்

Recently Added

More From This Category

x