Published on : 22 Oct 2024 15:57 pm

வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது... ஏன்?

Published on : 22 Oct 2024 15:57 pm

1 / 7

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மோர் அல்லது நீராகாரம் குடிப்பது உடலுக்கு நல்லது. உடல் குளிர்ச்சியும், தெம்பும் கிட்டும். 

2 / 7

நீங்கள் ஒல்லியாக இருப்பதால் மோர் அருந்துவதுதான் மிக நல்லது. காரணம், மோரில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதனால்  நல்ல தெம்பு கிடைக்கும்.
 

3 / 7

தயிரில் இருந்து தயாரிக்கப்படும் நீர்ச்சத்து நிறைந்த புரோபயாடிக் உணவுதான் மோர். பாலில் உள்ள எல்லாச் சத்துகளும் மோரிலும் உள்ளன.

4 / 7

இரண்டு வயதுக்கு மேல் எல்லா வயதினருக்கும் எந்த நேரத்திலும் அருந்துவதற்கு ஏற்ற பானம்தான் மோர். இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது.

5 / 7

வாய் வறட்சியைப் போக்குகிறது. வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல், அல்சர், அஜீரணம் போன்ற பல வயிற்று நோய்களுக்கு மோர் ஓர் அருமருந்து. 
 

6 / 7

காய்ச்சல், சளி இருப்பவர்கள் மோர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். இது தவறு. மோரில் கலக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருந்தால் காய்ச்சல், சளி வராது.
 

7 / 7

சித்த மருத்துவ முறையில் பல மருந்துகள் மோரில் கலந்து கொடுக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. | கைடன்ஸ்: மருத்துவர் கு.கணேசன்

Recently Added

More From This Category

x