பணக்காரராக வாழ 5 உத்திகள்!
Published on : 21 Oct 2024 17:31 pm
1 / 10
“அப்போது 10 ஆயிரம்... இப்போது 50 ஆயிரம் சம்பளம். இப்போதும் பணம் போதவில்லை.. என்னடா வாழ்க்கை?” என்று புலம்புபவரா நீங்கள்?
2 / 10
பார்கின்சன் விதி தெறியுமா? "அதிகரிக்கும் வருமானத்துக்கு ஏற்ப, ஒருவரது செலவுகளும் தொடர்ந்து அதிகரிக்கும்" என்கிறார் பார்கின்சன்.
3 / 10
"ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாரோ அதைவிட சற்று ‘அதிகமாகவே அவர் செலவழிப்பார்" என்கிறார் பார்கின்சன்.
4 / 10
உளவியல் ரீதியாக, இது சராசரி மனிதர்களின் மனோபாவம். இதைக் கடப்பவர்களே பணக்காரர்கள் ஆகிறார்கள். இதோ.. பணக்காரர்கள் பின்பற்றும் 5 உத்திகள்
5 / 10
1. வருமானத்தில் 50% மட்டுமே தன்னுடைய பணம் என எண்ணி பணக்காரர்கள் செலவழிக்கிறார்கள். மீதமுள்ள 50% பணத்தை எதிர்காலத்துக்காக சேமிக்கிறார்கள்.
6 / 10
2. சேமிப்பைத் தொடர ஒரு முறை உள்ளது. பணக்காரர்கள் வங்கிகளுக்கு சேமிப்புக்கும், ஸ்டாண்டிங் இன்ஸ்டிரக்ஷன் கொடுத்து விடுவர். தானாகவே சேமிப்புக்கு சென்றுவிடும்.
7 / 10
3. பணக்காரர்கள் எந்தப் பொருளை வாங்கும் போதும் பேரம் பேசத் தவறுவதில்லை. மேலும் தேவையற்ற பொருட்களை வாங்குவதையும் அறவே தவிர்க்கிறார்கள்.
8 / 10
4. வருமானம் தரக்கூடிய, செலவைக் குறைக்கக்கூடிய எந்தப் பொருளையும் தவணை முறையில் வாங்குவதில் தவறில்லை. அவற்றின் மூலமே கடனை அடைத்து விடலாம்.
9 / 10
5. பணக்காரர்கள், ஏழைகளைப் போல வாழ்கிறார்கள். ஆனால் பணக்காரர்களைப் போல சேமிக்கிறார்கள். குறைவாகப் பணம் சம்பாதிப்பதில் தவறில்லை.
10 / 10
ஆரம்ப காலத்தில் ஏழைகளைப்போல வாழப் பழகிக்கொண்டால் ஓய்வுக்குப் பிறகு, பணக்காரர்களைப் போல் வாழலாம். | தகவல்: இராம்குமார் சிங்காரம்