Published on : 15 Sep 2024 16:04 pm

திக்குவாய்: நோயா? உளவியல் குறைபாடா?

Published on : 15 Sep 2024 16:04 pm

1 / 8

திக்குவாய் ஏற்படுகிறது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மூளை நரம்புகளின் இணைப்புச் சுற்றுகளில் ஏற்படும் பிரச்சினைகளாலேயே திக்குவாய் ஏற்படுகிறது என்பதுதான் பொதுவான கருத்து.

2 / 8

ஒருவர் பேசுவது அவருக்கே திரும்பக் கேட்டு, அதை வைத்து பேச்சின் வேகத்தை முடிவு செய்யும் பின்னூட்ட (feed back) செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளாலேயே திக்குவாய்  ஏற்படுகிறது.

3 / 8

சில குழந்தைகளுக்குச் சிறு வயதில் திக்குவாய் இருக்கும். பின்னர் சரியாகிவிடும். சிலருக்குப் பதற்றம் அடையும்போது மட்டும் திக்குவாயும், சிலருக்குக் கூட்டத்தில் பேசும்போதும் ஏற்படும்.
 

4 / 8

நாளடைவில் வெளியிடங்களுக்குச் செல்வது, பேசுவது போன்ற விஷயங்களில் திக்குவாய் உள்ளவர்களுக்குப் பதற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதற்றமின்றிப் பேசும்போதும்கூடத் திக்குவாய் இருக்கும்.

5 / 8

பொதுவாகவே உடலையும் மனத்தையும் பிரிக்க முடியாது. பதற்றம் அதிகரிக்கும்போது திக்குவாய் அதிகரிக்கும். திக்குவாய் இருப்பவர்கள் பேச்சுப் பயிற்சி நிபுணரிடம் பயிற்சி பெற வேண்டும்.
 

6 / 8

பதற்றம் அதிகமாக இருப்பவர்கள் மனநல ஆலோசனை பெறவேண்டும். குறிப்பாக மனதைப் பதற்றமில்லாமல் வைத்துக்கொள்ள, முதலில் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்.
 

7 / 8

அடுத்தவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ, திக்கிவிடுமோ என்று பயந்து பேசாமல் இருப்பது, முகத்தைப் பார்த்துப் பேசாமல் இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 

8 / 8

பேசும்போது நிறைய நேரம் எடுத்துக்கொண்டு பேச வேண்டும். தன்னம்பிக்கையுடன் இடைவிடாமல் பயிற்சி செய்தால் திக்குவாயை வெல்லலாம். | தகவல்கள்: ஜி.ராமானுஜம்

Recently Added

More From This Category

x