Published on : 13 Sep 2024 16:32 pm

காதுகளை அசைப்பது ஏன்? - யானை: சில தகவல்கள்

Published on : 13 Sep 2024 16:32 pm

1 / 11

நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப் பெரிய பாலூட்டியான யானைகளில் 2 வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.

2 / 11

ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. 

3 / 11

பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.

4 / 11

யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.

5 / 11

யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.

6 / 11

யானைகளின் பெரிய - மெல்லிய காதுகள் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன. 

7 / 11

உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம்தான் யானையின் உடலைக் குளிர்விக்கிறது. இதற்காகவே காதுகளை அசைக்கின்றன.

8 / 11

யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்ப நிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் இது பயன்படுகிறது.

9 / 11

யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக் கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோ கிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது.

10 / 11

பெண் யானைகள் சேர்ந்து வாழக் கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து சென்று தனியாக வாழத் தொடங்கும். 

11 / 11

யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கும். தும்பிக்கையை சுவாசக் குழாய் போல பயன்படுத்தி ஆழமான நீரிலும் யானைகளால் இருக்க முடியும். | தகவல்கள்: ஷங்கர்

Recently Added

More From This Category

x