Published on : 22 Jul 2024 15:59 pm

“பணம் இருந்தால்...” - நீட் பிரச்சினையில் ராகுல் முதல் அகிலேஷ் வரை மக்களவையில் பேசியது என்ன?

Published on : 22 Jul 2024 15:59 pm

1 / 9
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியதும், மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே நடைபெற்ற காரசார விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதன் முக்கிய அம்சங்கள் இங்கே...
2 / 9
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்: "நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்."
3 / 9
திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி: "நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்."
4 / 9
கேரள எம்.பி. பிரேமச்சந்திரன்: "நீட் முறைகேடு, போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தேர்வுக்கு பதிவு செய்வதில் இருந்து தொடங்கி அனைத்து படிநிலைகளிலும் முறைகேடு நடைபெறுகிறது."
5 / 9
காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன்: "கடந்த ஏழு ஆண்டுகளில் 15 மாநிலங்களில், மொத்தம் 70 தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக அரசு தரவுகள் சொல்கின்றன. தமிழகம் போன்ற மாநிலங்கள், பல பிராந்திய கட்சிகள் இந்த தேர்வுகளின் நேர்மை குறித்து கவலை தெரிவித்துள்ளன. மேலும், இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். நீட் முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹரியாணா தேர்வு மையம் யாருடையது? நீட் தேர்வு நடந்த குஜராத், ஹரியாணா மாநில பள்ளிகள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா இதுவரை கண்டிராத மிகப்பெரிய மோசடிகளில் இதுவும் ஒன்று. எனவே உயர்மட்டக் குழுவை அமைத்து நீட் தேர்வு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க வேண்டும்."
6 / 9
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்: "வினாத்தாள் கசிவுகளில் இந்த அரசு புதிய சாதனைகளை படைத்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகின்றன. கைதுகள் நடக்கின்றன. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது."
7 / 9
ராகுல் காந்தி: "இந்தியாவின் தேர்வு முறைகளில் பெரிய பிரச்சினை உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.
8 / 9
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் உள்ளது.”
9 / 9
“நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் பரீட்சை முறை குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010ல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?" என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

Recently Added

More From This Category

x